ஜீவத்தின் பூங்கொடியே
மே மாதம் மேதினியில்
வந்துதித்த சோதரியே
தேன் மொழியாய் சந்தரிக்கும்
ஜீவத்தின் பூங்கொடியே
அந்தியில் பூக்கும் பூமகளே
வாசம் வீசும் மலரே
உள்ளத்தின் உயிராய்
ஓடும் செங்குருதியே
உயிரின் உயிராய் வாழும் தீ நாக்கு
கண்களில் ஊறும் உந்தன் அன்பை
உள்ளத்தில் நிறுத்தியதால்
முல்லைப் பூவாய் நறுமணக்கும் பேதை நீ
எங்கள் வாழ்வின் வசந்தம் நீ
மாதா பிதாவிற்கு அடுத்தவள் நீ
பொன் வான தேசத்தில்
விண் மீன் நனைக்கும் மேகங்களில்
தேவி வாசத்தினுள் தவழும் குமரி நீ
வண்ணத்துப் பூச்சிகளின் ஜீவிதம் நீ
எமது இதயக் கனவை சுமப்பவளே
மலரும் மொட்டுக்களில்
துடிக்கும் சந்தம் நீ
உள்ளத்தால் உள்ளம் தேடுதலில்
ஆன்மாவினால் சிரஷ்டிக்கும் தெய்வம் நீ
புதுமைகள் படைத்திட
புதுவாழ்வு பெற்றிட
புயலாய் புகுந்தாய் பல்கலையினுள்
விவசாயத் துறையை எள்ளி நகையாதே
தூக்கத்தை தொலைத்து நலமாக கற்றிடு
புதுமையான நட்புகளை ஜீவனாய் பெற்று
புதுமைகள் பல படைத்திடு
எமது குடும்பத்தின் கருவறையினுள்
வியாபித்திருக்கும் பேசும் விக்கிரகம் நீ
கன்னல் சுருதியாய் காதில் ரீங்காரமிடும்
உன்குரல் கல்லையும் கனியாக்கும்
உறவாக உனையாக்கி கொள்ள
யாம் செய்த பயன் யாதோ
பார்க்கும் திசையெல்லாம்-நீ
வெண்ணிலவாய் ஜொலிக்கின்றாய்
என் கன்னி கவிதையின்
கருப்பொருளாய் உயிர்ப்பவள் நீ
சத்தமேதுமின்றி சேறு பூசும் உலகத்திலே
ஏட்டோடு போராடுபவள் நீ
இன்ப வானில் சிறகசைக்கும்
இளம் பறவை-ஆனாலும்
குடும்பத்தின் ஒருமைக்கு திரையிடும் வேலி நீ
ஈர் பதினோராண்டுகள் கடந்து
வீறுநடை போடுபவள் நீ
இன்னும் பல்லாண்டுகள் மேதினியில்
பலவும் பெற்று இன்பமாய் வாழ
ஆன்மாவின் சிரஷ்டத்தினுள்
வாழ்த்துக்கள் பற்பல.
வந்துதித்த சோதரியே
தேன் மொழியாய் சந்தரிக்கும்
ஜீவத்தின் பூங்கொடியே
அந்தியில் பூக்கும் பூமகளே
வாசம் வீசும் மலரே
உள்ளத்தின் உயிராய்
ஓடும் செங்குருதியே
உயிரின் உயிராய் வாழும் தீ நாக்கு
கண்களில் ஊறும் உந்தன் அன்பை
உள்ளத்தில் நிறுத்தியதால்
முல்லைப் பூவாய் நறுமணக்கும் பேதை நீ
எங்கள் வாழ்வின் வசந்தம் நீ
மாதா பிதாவிற்கு அடுத்தவள் நீ
பொன் வான தேசத்தில்
விண் மீன் நனைக்கும் மேகங்களில்
தேவி வாசத்தினுள் தவழும் குமரி நீ
வண்ணத்துப் பூச்சிகளின் ஜீவிதம் நீ
எமது இதயக் கனவை சுமப்பவளே
மலரும் மொட்டுக்களில்
துடிக்கும் சந்தம் நீ
உள்ளத்தால் உள்ளம் தேடுதலில்
ஆன்மாவினால் சிரஷ்டிக்கும் தெய்வம் நீ
புதுமைகள் படைத்திட
புதுவாழ்வு பெற்றிட
புயலாய் புகுந்தாய் பல்கலையினுள்
விவசாயத் துறையை எள்ளி நகையாதே
தூக்கத்தை தொலைத்து நலமாக கற்றிடு
புதுமையான நட்புகளை ஜீவனாய் பெற்று
புதுமைகள் பல படைத்திடு
எமது குடும்பத்தின் கருவறையினுள்
வியாபித்திருக்கும் பேசும் விக்கிரகம் நீ
கன்னல் சுருதியாய் காதில் ரீங்காரமிடும்
உன்குரல் கல்லையும் கனியாக்கும்
உறவாக உனையாக்கி கொள்ள
யாம் செய்த பயன் யாதோ
பார்க்கும் திசையெல்லாம்-நீ
வெண்ணிலவாய் ஜொலிக்கின்றாய்
என் கன்னி கவிதையின்
கருப்பொருளாய் உயிர்ப்பவள் நீ
சத்தமேதுமின்றி சேறு பூசும் உலகத்திலே
ஏட்டோடு போராடுபவள் நீ
இன்ப வானில் சிறகசைக்கும்
இளம் பறவை-ஆனாலும்
குடும்பத்தின் ஒருமைக்கு திரையிடும் வேலி நீ
ஈர் பதினோராண்டுகள் கடந்து
வீறுநடை போடுபவள் நீ
இன்னும் பல்லாண்டுகள் மேதினியில்
பலவும் பெற்று இன்பமாய் வாழ
ஆன்மாவின் சிரஷ்டத்தினுள்
வாழ்த்துக்கள் பற்பல.
(2001 ம் ஆண்டின் பிற்பகுதியில் முதன் முதலில் குடும்ப உறவுகளை பிரிந்து இருந்தபோது என் எண்ணத்தில் விரிந்த வரிகள் தான் இவை. இன்றைய தினத்தில்(மே 30) எனது எண்ணங்களை இங்கே பகிர்வது மிகவும் பொருத்தமானதாகும்)
உங்களின் கருத்துக்களை இங்கே பதியுங்கள்