Image and video hosting by TinyPic தேவிவாசம் தொலைக்காட்சி DVTV
DVTV on DEVIVAASAM. Enjoy With DVTV

ஜீவத்தின் பூங்கொடியே

மே மாதம் மேதினியில்
வந்துதித்த சோதரியே
தேன் மொழியாய் சந்தரிக்கும்
ஜீவத்தின் பூங்கொடியே

அந்தியில் பூக்கும் பூமகளே
வாசம் வீசும் மலரே
உள்ளத்தின் உயிராய்
ஓடும் செங்குருதியே

உயிரின் உயிராய் வாழும் தீ நாக்கு
கண்களில் ஊறும் உந்தன் அன்பை
உள்ளத்தில் நிறுத்தியதால்
முல்லைப் பூவாய் நறுமணக்கும் பேதை நீ

எங்கள் வாழ்வின் வசந்தம் நீ
மாதா பிதாவிற்கு அடுத்தவள் நீ
பொன் வான தேசத்தில்
விண் மீன் நனைக்கும் மேகங்களில்
தேவி வாசத்தினுள் தவழும் குமரி நீ

வண்ணத்துப் பூச்சிகளின் ஜீவிதம் நீ
எமது இதயக் கனவை சுமப்பவளே
மலரும் மொட்டுக்களில்
துடிக்கும் சந்தம் நீ
உள்ளத்தால் உள்ளம் தேடுதலில்
ஆன்மாவினால் சிரஷ்டிக்கும் தெய்வம் நீ

புதுமைகள் படைத்திட
புதுவாழ்வு பெற்றிட
புயலாய் புகுந்தாய் பல்கலையினுள்
விவசாயத் துறையை எள்ளி நகையாதே
தூக்கத்தை தொலைத்து நலமாக கற்றிடு
புதுமையான நட்புகளை ஜீவனாய் பெற்று
புதுமைகள் பல படைத்திடு

எமது குடும்பத்தின் கருவறையினுள்
வியாபித்திருக்கும் பேசும் விக்கிரகம் நீ
கன்னல் சுருதியாய் காதில் ரீங்காரமிடும்
உன்குரல் கல்லையும் கனியாக்கும்

உறவாக உனையாக்கி கொள்ள
யாம் செய்த பயன் யாதோ
பார்க்கும் திசையெல்லாம்-நீ
வெண்ணிலவாய் ஜொலிக்கின்றாய்

என் கன்னி கவிதையின்
கருப்பொருளாய் உயிர்ப்பவள் நீ
சத்தமேதுமின்றி சேறு பூசும் உலகத்திலே
ஏட்டோடு போராடுபவள் நீ
இன்ப வானில் சிறகசைக்கும்
இளம் பறவை-ஆனாலும்
குடும்பத்தின் ஒருமைக்கு திரையிடும் வேலி நீ

ஈர் பதினோராண்டுகள் கடந்து
வீறுநடை போடுபவள் நீ
இன்னும் பல்லாண்டுகள் மேதினியில்
பலவும் பெற்று இன்பமாய் வாழ
ஆன்மாவின் சிரஷ்டத்தினுள்
வாழ்த்துக்கள் பற்பல.


(2001 ம் ஆண்டின் பிற்பகுதியில் முதன் முதலில் குடும்ப உறவுகளை பிரிந்து இருந்தபோது என் எண்ணத்தில் விரிந்த வரிகள் தான் இவை. இன்றைய தினத்தில்(மே 30) எனது எண்ணங்களை இங்கே பகிர்வது மிகவும் பொருத்தமானதாகும்)
0 Responses

உங்களின் கருத்துக்களை இங்கே பதியுங்கள்